ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம், புதுச்சத்திரம் வட்டார அலுவலகத்தில் நடைபெற்ற “உலக மண்வள நாள்” நிகழ்ச்சியில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் அவர்கள் கலந்துகொண்டு புதிய வேளாண் காடுகள் வளர்ப்புத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு தேக்கு, நாவல்,வேம்பு,நெல்லி,பெருநெல்லி, ஆகிய மரக்கன்றுகள், மானியத்துடன் தார்ப்பாய் உள்ளிட்ட விவசாய உபகரணங்கள் மற்றும் மண்பரிசோதனை சான்றிதழ், உள்ளிட்டவற்றை வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய அட்மா குழு தலைவர் துரை(எ) ராமசாமி, வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் M.P.கௌதம், தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் ஜெயப்பிரகாஷ்,மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாபு, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் குமார், விக்னேஷ், துரைமுருகன் வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) ஜெகதீசன், வேளாண்மை உதவி இயக்குனர் பேபிகலா, தோட்டக்கலை உதவி இயக்குனர் பால் ஜாஸ்மின், வேளாண் அலுவலர்கள் தரண்யா,பூர்ணிமா, சாரதா மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *