நாமக்கல் மாவட்ட செய்தி….

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்க வலியுறுத்தி சிபிஎம் சார்பில் நாமக்கல்லில் ஆர்பாட்டம்…

நாமக்கல்; ஏப்,3

பெட்ரோல் ,டீசல் , மற்றும்கேஸ் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், உயர்த்தப்பட்ட சுங்ககட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நாடு தழுவிய ஆர்பாட்டம் நடைபெற்றது, அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்ட தலைநகர் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்பாட்டம் நடைபெற்றது . கட்சியின் நாமக்கல் பிரதேச அமைப்பு குழு கன்வீனர் தோழர் ந. வேலுசாமி தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் சிவசந்திரன் , செங்கோட்டையன்,ஜெயமணி,மற்றும் கு. சிவராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *