நாமக்கல் மாவட்டம்

செல்லப்பம்பட்டி கிராமம்

பைபாஸ் ரோட்டில் கொட்டப்படும் கோழி கழிவுகள்

செல்லப்பம்பட்டி முதல் பொம்மைகுட்டைமேடு செல்லும் வழியில் பைபாஸ் ரோட்டில் கோழி கழிவுகள் கொட்டப்படுகிறது.இதனால் அப்பகுதியில் துறு நாற்றம் விசுவது மட்டும் அல்லாமல் நாய்கள் அப்பகுதியில் சுற்றி திரிவதால் வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் தொற்று பரவும் அபாயமும் உள்ளது,மேலும் இப்பகுதியின் அருகில் பெட்ரோல் பங்க் இருப்பதால் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன, நாய்கள் சுற்றி திரிவதால் விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதால் திங்கட்கிழமை அன்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்படுவதாக சமூக ஆர்வலர் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *