நூதன பிரச்சாரம் மேற்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்

பிப்ரவரி 15

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி 18-வது வார்டில் உள்ளாட்சி தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்க்கு ஒதுக்கப்பட்டு சுத்தியல் அரிவாள் நட்சத்திரத்தில் சரவணன் என்பவர் போட்டியிடுகிறார்.நேற்று மாலை 18-வது பகுதிக்குட்பட்ட ஜனதா நகர், முனியப்பன், முனியப்பன் கோவில் வீதி, பிள்ளையார் கோவில் வீதி, ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உறுப்பினர், நிர்வாகிகளுடன் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த பிரச்சாரத்தில் நூதனமாக ஸ்பீக்கர் மைக் செட் இருசக்கர வாகனத்தில் வைத்து அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில் வார்டில் நிலவும் பிரச்சனைகள் குறித்தும் ஏற்படுத்த வேண்டிய கட்டமைப்பு அடிப்படை வசதிகள் குறித்தும் வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டால் என்ன மாதிரியான செய்யும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை எடுத்துக் கூறி பொதுமக்கள் இடையே வாக்கு சேகரித்தார். இந்த நூதன பிரச்சாரம் பொதுமக்களை வெகுவாய் பலரையும் ஈர்த்தது. ஏராளமான மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இந்த வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *