கொலை குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிடக்கோரி பள்ளிபாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொது மக்கள்

டிசம்பர் -9

நாமக்கல் மாவட்டம்
பள்ளிபாளையம் ஆவாரங்காடு சனிசந்தை பகுதியில் திருச்செங்கோடு கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த கோகுல்நந்தா(23) வயது என்பவர் ஈரோட்டில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு கடந்த செவ்வாய் அன்று அதிகாலை பள்ளிபாளையம் ஆவாரங்காடு சனி சந்தை பகுதிக்கு வந்துள்ளார்.
கோகுல்நந்தா மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படும் நிலையில் அங்கிருந்த பொதுமக்களை கோகுல்நந்தா கற்களைக் கொண்டு தாக்கியதில் அதே பகுதியை சேர்ந்த வேலப்பன் வயது எழுபத்தைந்து என்ற முதியவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.. தப்பி ஓட முயன்ற கோகுல் நந்தாவை பள்ளிபாளையம் போலீசார் மடக்கி பிடித்து சிறையில் கைது செய்தனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றவாளி கோகுல்நந்தி புகைப்படம் எதுவும் பத்திரிகைகளில் வெளிவராததால் அவர் குறித்த தகவல் ஏதும் இல்லை எனக் கூறியும் உயிரிழந்த வேலப்பனின் உறவினர்கள் நேற்று பள்ளிபாளையம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கொலை குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளியின் படத்தை வெளியிடாமல் உயிரிழந்த வேலப்பன் படத்தை மட்டும் வெளியிடுவது எந்த வகையில் சரியானது ,அதே நேரத்தில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் குறைந்த தண்டனையுடன் மீண்டும் வெளியே சுதந்திரமாக சுற்ற கூடிய சூழல் உள்ளதால் எங்களை தற்காத்துக் கொள்ளவும் அவருடைய புகைப்படத்தை வெளியிட்டு எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கூறி காவல்துறை அதிகார்களிடம் உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர்.. பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சந்திரகுமார் அவர்கள் சட்ட விதிகளை எடுத்துக்கூறி குற்றவாளி மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மற்றும் தண்டனை பெற்று தரப்படும் என உறுதி அளித்து அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்… இதனால் பள்ளிபாளையம் காவல் நிலையப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *