பள்ளிபாளையம் நகர தேமுதிகவினர் நகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தனர்.

டிசம்பர் 9

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி

நாமக்கல் மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருவதன் காரணமாக மாவட்டத்தின் ஒரு பகுதியாக உள்ள பள்ளிபாளையம் பகுதியிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது ..பெய்யும் மழையின் காரணமாக சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர் சாக்கடை நீரில் கலந்து ஓடுவதால் கொசு தொல்லை மற்றும் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதால் பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாகம் நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளிலும் தினந்தோறும் கொசுக்கள் உற்பத்தி ஆகாமல் இருக்க கொசு மருந்துகளையும் டெங்கு நோய் பரவாமல் தடுக்க டெங்கு நோய்த் தடுப்பு மருந்துகளும் அடித்திட வேண்டுமென பள்ளிபாளையம் நகர தேமுதிகவினர் இன்று பள்ளிபாளையம் நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் சந்தித்து மனு அளித்தனர் … பள்ளிபாளையம் தேமுதிக நகர செயலாளர் வெள்ளிங்கிரி, மற்றும் நகர நிர்வாகிகள் தமிழ்ச்செல்வம், N.ஆகாஷ் குமார், சரவணன் ,மற்றும் பலர் இந்த நிகழ்வின்போது உடனிருந்தனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *