![](http://vidiyalainokki.com/wp-content/uploads/2022/01/IMG-20220112-WA0007-1024x576.jpg)
ரயில்வே நுழைவு பாதை சாலையை சீரமைத்திடுக! சமூக உரிமைகள் பாதுகாப்பு கழகத்தினர் கோரிக்கை
ஜனவரி 12
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி ஆர்எஸ் நுழைவு பாலம் வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே ரயில்வே நுழைவு பாதை சாலையில் ஆற்று நீர் கசிவு மற்றும் மழை தண்ணீர் தேங்கி வருவதால் பாலம் பழுதடைந்து தார் சாலையில் அமைக்கப்பட்டிருந்த கம்பிகள் தெரிகின்றன. இரவு நேரங்களில் போதிய மின் விளக்குகள் எரிவதில்லை எனக் கூறப்படுகிறது, இதனால் இரவு நேரத்தில் அவ்வழியே வரும் வாகன ஓட்டிகள் தார்சாலை சிதிலமடைந்து இருப்பது தெரியாமல் அவ்வப்போது தார்சாலை குழியில் விழுந்து விபத்து ஏற்பட்டு பலரும் காயம் அடைந்து வரும் நிலையில் தொடர்ச்சியாக இதேபோல நிலை நீடித்தால் உயிர் இழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுக்குறித்து அரசுக்கும் நெடுஞ்சாலை துறையினருக்கும் , மனுக்கள் மேல் மனுக்கள் அளித்தும் போதிய நடவடிக்கைகள் இல்லை. எனவே போர்க்கால அடிப்படையில் ரயில்வே நுழைவு பாதை சாலையை சரி செய்து தர சமூக உரிமைகள் பாதுகாப்பு கழகத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.