பள்ளிபாளையம் காவிரி பாலத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட நகராட்சி ஊழியர்கள்
ஜனவரி 15
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி
மாக் கிளினீக் திட்டத்தின் அடிப்படையில் நேற்று காலை தொடங்கி மாலை வரை பள்ளிபாளையம் நகராட்சி பகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் பள்ளிபாளையம் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டனர் . பள்ளிபாளையம் ஈரோட்டை இணைக்கும் பாலத்தின் இருபுறமும் உள்ள பிளாஸ்டிக் குப்பைககள்,மண் குவியல்கள்,காகித குப்பைகளை அகற்றும் பணியில் பத்துக்கும் மேற்பட்ட நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்…