![](http://vidiyalainokki.com/wp-content/uploads/2022/01/IMG-20220114-WA0101-1-1024x576.jpg)
பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் பெண் குதிப்பு.
ஜனவரி 15
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள பாப்பம்பாளையம் பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் வசந்தி வயது 45-
20 -ஆண்டுகளுக்கு முன்னாள் கணவர் ராஜேந்திரன் இறந்து விட்ட நிலையில் மூன்று மகள்கள் உள்ளனர். மூவருக்கும் திருமணம் ஆகி விட்ட நிலையில் வசந்தி தனியே பாரதி நகரில் உள்ள இல்லத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக கடந்த சில வருடங்களாக தொடர் சிகிச்சைகள் எடுத்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை ஈரோட்டில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்த வசந்தி காலை ஈரோட்டில் இருந்து கிளம்பி வந்து பள்ளிபாளையம் காவிரி ஆற்றுப் பாலத்தில் இருந்து குதித்துதாக கூறப்படுகிறது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளிக்கவே, அங்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் வசந்தியின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். உடல் கிடைக்காததால் இரண்டாம் நாளான நேற்றும் உள்ளூர் பரிசல் ஓட்டிகள் உதவியுடன் ஆற்றில் மூழ்கிய வசந்தியை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். மாலை ஆகியும் உடல் கிடைக்காததால் இன்று மீண்டும் மூன்றாவது நாளாக உடலை தேடும் பணியில் பரிசல் ஓட்டிகள் ஈடுபடவுள்ளன. சிறுநீரகக் கோளாறு காரணமாக நோய்வாய்ப்பட்டு வந்தததால், தொடர் மருத்துவ சிகிச்சையின் காரணமாக மன வேதனை அடைந்ததாலும் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது..பள்ளிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.